திருமதி. பாரததேவி நடராசா
தோற்றம்: 27 செப்டம்பர் 1935 - மறைவு: 13 நவம்பர் 2024
யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாரதிதேவி நடராசா அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
டாக்டர். கிருபாகரன் (பேராசிரியார்), டாக்டர். பகீரதன் (பல் வைத்திய நிபுணர்), பொறியியலாளர். யோகராசா (நீர்ப்பாசண பணிப்பாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டாக்டர். மைதிலி (வைத்திய கலாநிதி), விவிதா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலா, உமை, பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஶ்ரீரங்கநாயகி, ஶ்ரீரகுவரன் மற்றும் ஶ்ரீபத்மநாதன், ஶ்ரீசரவணபவன், காலஞ்சென்ற பார்கவிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தங்கம்மா, செல்லம்மா, பரராஜசிங்கம் மற்றும் சாரதா, ராஜேஸ்வரி, வத்சலா, சிவநேயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 15-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
