திரு. பூலோகசிங்கம் குமாரகுலசிங்கம் (தங்கராசா)

(முன்னாள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுசங்கத்தலைவரும் அகில இலங்கை சமாதான நீதவான்)

பூலோகசிங்கம் குமாரகுலசிங்கம் (தங்கராசா)

தோற்றம்: 07 ஜூலை 1948 - மறைவு: 15 ஜனவரி 2024

வவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூலோகசிங்கம் குமாரகுலசிங்கம் அவர்கள் 15-01-2024 ம் திகதி  திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற பூலோகசிங்கம்-தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நல்லையா-வள்ளியம்மை தம்பதிகளின்  அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவவரும்,

செல்வகுமார் (செல்வன்-பிரான்ஸ்), அருணகுமார் (அகிலன்), ஜெயக்குமார் (ஜெயம்), தெய்வநாயகி (மஞ்சு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரி (மதி-பிரான்ஸ்), தமிழ்ச்செல்வி (லதா), குமுதா, உதயசீலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

யோகசிங்கம், திலகவதி (கனடா), சத்தியபாமா, பங்கையச்செல்வி (கனடா), காலஞ்சென்ற கருணாநிதி, மலர்மாலை, ரேவதி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

தேவகி, காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை,குணலிங்கம் மற்றும் பரமநாதன் (கனடா), சத்தியபாமா, செகராசசேகரம், ரவீந்திரராஜா (ஜேர்மன்), சிவசுப்பிரமணியம், விஜயராராஜா, செல்வராணி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜதுர்ஷன் (லண்டன்), யுறேகா, மதுஷிகா (பிரான்ஸ்), ரிஷாந் (பிரான்ஸ்), துஷாந் (பிரான்ஸ்), கர்ஷா, பிரகீஷ், சருசன், புவிக்கா, கிஷோபன், டிவர்சிகா ஆகியோரின் பாசமிகு  பேரனும் ஆவார்.

 
அன்னாரின் பூதவுடல் நாளை 17-01-2024ம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று
தகனக்கிரியைக்களுக்காக பம்பைமடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)