திரு. சி. மு. சிவப்பிரகாசம்

சி. மு. சிவப்பிரகாசம்

தோற்றம்: 23 ஆகஸ்ட் 1934 - மறைவு: 30 மே 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பண்டாவரளையில் வசித்தவருமான திரு. சி. மு. சிவப்பிரகாசம் அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இரவு 9.58 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சி.முத்தையாபிள்ளை-கனகம்பாள் தம்பதியினரின் புதல்வரும்,

குள்வத்தை காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை-அகிலாண்டம் தம்பதியினரின் மருமகனும்,

சுபத்ராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சாரதாம்பாள் நடராஜா, சண்மும், கனகராஜா ஆகியோரின் சகோதரரும்,

நிர்மலாதேவி, சுந்தரமோகன், அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகசபை, மனோரஞ்சனி (ரஞ்சனி), நிர்மலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வினுஷன், பவிஷன்யா, திவாகர் (ஷான்), பிரகாஷ் ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,

ஶ்ரீதரன், ருஷ்யாந்தினி ஆகியோரின் அன்பு தாத்தாவும்,

காலஞ்சென்ற நடேஷபிள்ளை - சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான முத்துகுமார் - மகேஷ்வரி, அருணாச்சலம் - தையல்நாயகி ஆகியோரின் சம்பந்தியும்,

திரிஷிகா, கிர்திக், ஷன்வி, லக்ஸ்வின் ஆகியோரின் பூட்டாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் குளியாப்பிட்டி ரெட்டதெனிய பொல்தவான பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 
 
57, வெந்தேசி வத்த,
சுபார்திபு, குளியாப்பிட்டிய.
 
தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2024 04:00)