திரு. C. சண்முகசுந்தரம் பிள்ளை
(உரிமையாளர் - சம்பூர்ணா கெடறிங், சரவணாஸ்)
மறைவு: 15 ஏப்ரல் 2025
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. C. சண்முகசுந்தரம் பிள்ளை அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், சூர்யகுமாரி (பாப்பா அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசிதம்பரம், பொன்னையா (முரளி), முத்துகுகுமரேசன், விஷ்ணுவர்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரெங்கமணி வீரபாகு, காலஞ்சென்ற செந்தில் ஆறுமுகம் பிள்ளை நேசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-04-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
