திருமதி. சந்திராதேவி சிவகுமாரக்குருக்கள்

(ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை)

சந்திராதேவி சிவகுமாரக்குருக்கள்

தோற்றம்: 05 அக்டோபர் 1955 - மறைவு: 21 ஜூன் 2024

திருகோணமலையை பிறப்பிடமாவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை திருமதி. சந்திராதேவி சிவகுமாரக்குருக்கள் அவர்கள் 21-6-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தெய்வத்திரு. சண்முகரத்தினசர்மா (எஸ். எஸ். சர்மா) தையல்நாயகி அம்மாவின் அன்புமகளும்,

சிவஸ்ரீ வரதராஜகுருக்கள் அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

சிவஸ்ரீ சிவகுமாரக்குருக்களின் அன்பு மனைவியும்,

பிரணவசர்மா, குகவரத சர்மா, சங்கர சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விபீஷ்ணவியின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீஹர்ஷித்தின் பாசமிகு பேர்த்தியும்,

காலஞ்சென்ற சோமாஸ்கந்தசர்மா, ஜெகதீஸ்வரசர்மா, ஜெகதாம்பிகை அம்மா, ஜெயலெட்சுமி, இராஜேஸிவரி, ஜனார்த்தனேஸ்வரசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இத்தகவலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இல.73, கஸகிசன் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

விலாசம்:-

73, கஸ்கிசன் வீதி

திருகோணமலை

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2024 21:16)