திரு. சந்திரசேகரம்பிள்ளை திலகேந்திரா
(Regional Accountant - CTB)
தோற்றம்: 27 ஏப்ரல் 1944 - மறைவு: 23 நவம்பர் 2024
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், தற்போது இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம்பிள்ளை திலகேந்திரா அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை-முத்துரத்தினம் தம்பதியினரின் ஏக புதல்வரும்,
காலஞ்சென்ற தம்பையா-சரச்சந்திராகாந்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அமிர்தகாந்தி அம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷ்யந்தன் (அவுஸ்திரேலியா), லக்ஷ்யானி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹேமா, திருப்பதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவதரன், தர்சிகா, தரணிகா (இலண்டன்), பவித்திரன் (அவுஸ்திரேலியா), சந்தோஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கோபால், இந்தி, அம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2024 புதன்கிழமை காலை 9.00 - 11.00 மணி வரை 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom இல் நடைபெற்று, நண்பகல் 12.45 மணியளவில் Holders Hill Rd, London இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
