திரு. செல்லையா செல்வராசா
(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்)
தோற்றம்: 04 மார்ச் 1950 - மறைவு: 26 டிசம்பர் 2024
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், தற்போது கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா செல்வராசா அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - சிவகாமி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவலோகநாயகி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன் (இலங்கை வங்கி-மானிப்பாய்), சாகித்தியா (பிரதேச செயலகம் - கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷிகா (பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்), தர்ஷாந் (பிரதேச அபிவிருத்தி வங்கி - மன்னார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹிருத்திஷா, லிஷ்வா ஆகியோரின் அன்பு பேரனும்,
சிவராஜா (மட்டுவில்), இராஜேஸ்வரி (கொடிகாமம்), விக்கினேஸ்வரி (நீர்வேலி), ஞானேஸ்வரி (உடையார்கட்டு), கமலேஸ்வரி (மந்துவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
3ஆம் கட்டை,
வாசிகசாலை வீதி, கல்வியங்காடு.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
