திருமதி. செல்லம்மா நடராசா
தோற்றம்: 25 ஏப்ரல் 1933 - மறைவு: 16 ஜனவரி 2025
யாழ். காரைநகர் கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், பாலாவோடை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம்மா நடராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
வேலுப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற A.V. நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வில்வராஜா, பாலாம்பிகை, நவரத்தினராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரூபி, கணநாதன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சண்முகம், பேரம்பலம், சின்னம்மா, நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோமசுந்தரம், ஆறுமுகம், மயில்வாகனம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவி இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
