திரு செல்லையா விவேகானந்தன்
தோற்றம்: 06 பெப்ரவரி 1941 - மறைவு: 06 அக்டோபர் 2020
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா விவேகானந்தன் அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலோஜினி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
விருஷ்னி(ஐக்கிய அமெரிக்கா), விஜயானந்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கார்த்திக், ஆன்றியா(Vernie) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, இராதாகிருஷ்ணன் மற்றும் பரம்சோதி(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின்அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், பத்மாசனி, தங்கரத்தினம் மற்றும் சரோஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,
அம்ரித்தா, அருணா, ஆரியா, ஈஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr. பூவேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. பாலேந்திரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), சாந்தி(அவுஸ்திரேலியா), ரோகிணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாய் மாமனும்,
சுதர்ஷன்(பிரித்தானியா), கௌஷல்யா(பிரித்தானியா), பிரதீப்(சிங்கப்பூர்), சுமித்திரா(அவுஸ்திரேலியா), Dr. தனஞ்ஜெயன்(ஐக்கிய அமெரிக்கா), அபராஜிதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சிறிய தந்தையும்,
அர்ஜுனா(ஐக்கிய அமெரிக்கா), வருணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
