திரு. சித்ரவேலு சித்ரகுமார்
தோற்றம்: 04 மே 1949 - மறைவு: 21 ஆகஸ்ட் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சித்ரவேலு சித்ரகுமார் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அனாறு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திரவேலு - சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசூரியம் - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செலவகுமாரி, உதயகுமாரி, தேவரஞ்சினி, மோகனகுமாரி, சிறீதரகுமார, விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விவேகானந்தமூர்த்தி, சப்புநாதன் மற்றும் லலிதா, வசந்தன், மல்லிகா, ஜெயக்குமாரி, வசந்தகுமாரி, பத்மராசா, நிர்மலகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜன், புருஷோத்தமன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மிருதினி, பவித்திரா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாதவ், யகன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 25-08-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரையும் Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent,QC H4N 1J7) இல் பார்வைக்காக வைககப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
