Mr. Devarajappillai Periyasamy
(Owner - Western Textiles - Nuwara Eliya)
Date of Birth: 02 November 1940 - Deceased: 27 May 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவராஜப்பிள்ளை பெரியசாமி அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7:05 மணியளவில் கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜப்பிள்ளை - பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான R.K. சிதம்பரம்பிள்ளை - வள்ளியம்மை (தெல்தோட்ட) தம்பதியினரின் மருமகனும்,
சுலோட்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
பாபு, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சவீதாவின் அன்பு மாமனாரும்,
சப்பாணி (திருச்சி), செல்லம்மா ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தசாமியின் மைத்துனரும்,
சுசீவாவின் (திருச்சி) கொழுந்தனாரும்,
சண்முகநாதன் (சுந்தர் - Iron Steel Company, கொழும்பு) - புஸ்பலதா தம்பதியினரின் சம்பந்தியும்,
பிரிதேஷ், நிகிடா ஆகியோரின் பாட்டாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
