திரு. தனிஷ்கோடி செல்லத்துரை
(பத்தர்-ராஜராஜேஸ்வரி தேவஸ்தான அம்பாள் உபாசகர்)
தோற்றம்: 29 ஜூலை 1946 - மறைவு: 09 ஏப்ரல் 2026
இல- 65/408, LKN வீடமைப்பு திட்டம், 5ம் ஒழுங்கை, காக்கை தீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தனுஷ்கோடி செல்லத்துரை அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனிஷ்கோடி பத்தர்-சுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், சொக்கலிங்கம் பத்தர்-தெய்வானை அம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அகிலாண்டம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
கமலரஞ்சினி, தனிஷ்குமார் ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
கிருஷ்ணகுமார், வேனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்ணவ், ராகவ், லக்ஷ்மி, அபிட்ச்சாஜி ஆகியோரின் பேரனும்,
ஹரிச்சந்திரன், பவானி ஆகியோர் அன்னாரின் பெறா மக்களும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-04-2026 சனிக்கிழமை முதல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் இறீதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
