திருமதி தர்மராசா ராசலட்சுமி
மறைவு: 27 மார்ச் 2024
யாழ். நந்தாவில் களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மராசா ராசலட்சுமி அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - நல்லம்மா தம்பதியினரின் தம்பதியினரின் மருமகளும்,
தர்மராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, ராசமணி மற்றும் சிவமணி, நவமணி, நடராசா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசாந்தினி, கஜனி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மஹிபன் அவர்களின் மாமியாரும்,
நேமிகாவின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளையில் உள்ள லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
