வைத்திய கலாநிதி. வேலாயுதம் சாரங்கன்
(வைத்திய கலாநிதி)
தோற்றம்: 30 செப்டம்பர் 1985 - மறைவு: 25 மே 2023
யாழ் சாவகச்சேரியை பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும் யாழ் கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி வேலாயுதம் சாரங்கன் அவர்கள் கடந்த 25-05-2023ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வேலாயுதம் (சட்டத்தரணி) சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகனும்,
சீவாமிர்தம் புனிதவதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
வைத்திய கலாநிதி. ருசாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
வசீகரன் (முகாமையாளர், திருநெல்வேலி), சாமந்தி (சட்டத்தரணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஜென்சி (அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாயத் திணைககளம் வடக்கு மகாணம்) மற்றும் திவாகரன் (முகாமையாளர், கொமர்ஷல் வங்கி,சாவகச்சேரி) அன்பு மைத்துனரும்,
அபிநயன், ஆர்த்யா ஆகியோரின் சிறிய தந்தையும்,
ஆதன்ஜன், அனுஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 28-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை8.30 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10,00 மணியளவில் தகனக் கிரியைக்காக கட்டை ஆலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
கோண்டாவில் கிழக்கு கோண்டாவில்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2023 20:37)
