திரு. துரைராஜ் ஜோன் ஜேக்கப்
தோற்றம்: 06 பெப்ரவரி 1953 - மறைவு: 29 ஜூன் 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. துரைராஜ் ஜோன் ஜேக்கப் அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தென்னிந்திய மெஞ்ஞானபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான ஜோன் துரைராஜ் நாடார் - சிரோன்மணி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான செல்லதுரை நாடார் - அமலபுஷ்பம் தம்பதியினரின் மருமகனும்,
மரிய ஜான்சிராணி அவர்களின் அன்புக்கணவரும்,
சுதந்திர போஸ், சுதந்திர ஈசாக், ஐயசிங் ராணி லூகாஸ் ஆகியோரின் சகோதரரும்,
ஜேக்கப் ஜோன் அருள்ராஜ், ஜேக்கப் தோமஸ் அமிர்தராஜ், ரிமோஷினி, வெர்ஜின் சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரி மெட்சன், கெமலின் தோமஸ், ஜெகதீஸ்வரன், கோகிலகுமார் ஆகியோரின் மாமனாரும்,
செபஸ்டியன், சபினா, சன்னா, க்ளெரின், க்ளேரோ, க்ளேவோ, ரஷோன், ஜெஷோன், ரிஷோன், ரொசேல், அடாரா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் சரீரம் இறுதி அஞ்சலிக்காக இல- 101/27, ஜெம்பட்டா வீதி, கொழும்பு 13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 02-07-2026 பிற்பகல் 03.30 மணியளவில் மாதம்பிட்டடிய றோமன் கத்தோலிக்க பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
