திருமதி இ. கேசவராஜா

(ஓய்வுபெற்ற பிரதி அதிபர் - திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி)

இ. கேசவராஜா

தோற்றம்: 25 ஏப்ரல் 1946 - மறைவு: 19 ஜனவரி 2024

திருகோணமலை கிளிவெட்டியை பிறப்பிடமாகவும், உவர்மலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இ. கேசவராஜா அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் - செல்லம்மா தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்ற சோமசேகரம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திரு. கேசவராஜா (கொத்தணி அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

உஷாநந்தினி, ஆனந்தபிரசாத் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரவிந்தன் (பொறியியலாளர்), ஜெயநந்தினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேஷியன், கேஷோ (பிரித்தானியா), பிளஸ்சா (பிரித்தானியா) ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 05:00)