திருமதி. ஈஸ்வரி தம்பிமுத்து
தோற்றம்: 12 டிசம்பர் 1928 - மறைவு: 12 அக்டோபர் 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மருதடி காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஈஸ்வரி தம்பிமுத்து அவர்கள் 12 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஐப்பசி மாதம் (12.10.2021) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காரைநகர் களபூமி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் தம்பிமுத்துவின் அன்பு மனைவியும்,
வடிவாம்பிகை, சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சேதுகாவலன்,நந்தினி,ராஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், பரமேஸ்வரி, லட்சுமணன், நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாக்சாயினி கிரிசாந், குகநீதன், பிரகாசினி, ஐஸ்வரியா, கங்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் 13.10.2021 புதன்கிழமை அன்று மருதடி,காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2021 08:52)
