திருமதி. ஞானாம்பிகை சபாநாயகம் (பேபி)

ஞானாம்பிகை சபாநாயகம் (பேபி)

தோற்றம்: 07 ஜூலை 1936 - மறைவு: 12 டிசம்பர் 2025

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், இல- 51/5, அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை சபாநாயகம் அவர்கள் 12-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கப்பூர் சோமசுந்தரம் - கனகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற முத்துத்தம்பி - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாநாயகம் அவர்களின் அன்புத் துணைவியும்,

தயாளன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - நல்லூர் பிரதேச சபை), யசோதரா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கலாவதி (வதனி), சித்தியகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஷாலி, பிரியங்கன் (இலண்டன்), சினேகா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கமலாம்பிகை, யோகாம்பிகை, கனகசுந்தரம் மற்றும் யோகேஸ்வரி, சிவபாதசுந்தரம், புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அரியநாயகம், ரூபி, மணி, மனநாயகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


""எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்." "
- Kana Kesavan  (Canada , 14/12/2025 02:43)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2025 00:00)