திரு கணபதிப்பிள்ளை ஞானப்பிரசாசம் பிலிப் (K. G பிலிப், ஆனந்தம்)
(இளைப்பாறிய அரச அலுவலர்- கல்வித்திணைக்களம் (அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம்), உணவுத்திணைக்களம் (கொழும்பு))
தோற்றம்: 23 ஆகஸ்ட் 1942 - மறைவு: 16 நவம்பர் 2023
யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு களுபோவில, இரத்மலானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானரட்ணம் (பொன்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வில்சன், நெல்சன், சுஜீவன், சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரிஜோசேப்பின், அந்தோனிப்பிள்ளை, அல்பிரட் மற்றும் அல்போன்ஸ், அக்னஸ், அகஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிம்சன், தர்சன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான ஞானமலர், ஞானப்பிரகாசம் (துரை), ஞானகுலேந்திரன் (சீனா) மற்றும் ஞானரஞ்சிதம் (பொன்ராசு), ஞானானந்தம் (தவம்), ஞானாமிர்த்தம் (பொன்மலர்), ஞானகுணரட்ணம் (குணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் 1.00 மணிமுதல் பிற்பகல் 7.00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் கொஹூவளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
