Mr. Ganapathippillai Sivasupramaniyam
Date of Birth: 18 October 1946 - Deceased: 12 December 2023
முள்ளியவளை முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், ஒட்டிசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீவன் (பொறியியலாளர்- Chairman of Span Engineering (Pvt) Ltd), நர்மதா (பிரதி அதிபர்- வ/தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்), மயூரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிதரன் (ஆசிரியர்- வ/தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்), சியாமளா (Director of Span Engineering (Pvt) Ltd), சுதர்சனா (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற கந்தசாமி, கனகையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), தர்மலிங்கம் (ஓய்வுபெற்ற விவசாய உதவி ஆணையாளர்), அன்னமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமலர், விவேகானந்தன், கமலேஸ்வரன், யோகராணி (ஓய்வுபெற்ற அதிபர்), புவனேந்திரன், லோகேஸ்வரன் (உதவிக்கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிமனை, துணுக்காய்), தயாபரன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஶ்ரீ நர்மி, ஶ்ரீ சங்கீத், சயந், சஸ்வின், சஞ்சனா, சன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 14-12-2023 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் மானுரிவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
