Mrs. Gangatharan Viyalatchumi
(அம்பிகா டெக்ஸ் (Pvt) Ltd- கெயிசர் வீதி)
Date of Birth: 11 February 1959 - Deceased: 17 September 2024
பதுளை-தியத்தலாவயைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கங்காதரன் அவர்களின் அன்பு மனைவி விஜலட்சுமி அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெகதீஷ்வரன், சுதாகரன், வைஷ்ணவி, சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தகுமார், நிரோஷா, பவித்ரா, வித்யாஷினி ஆகியோரின் மாமியாரும்,
மோதிஷ்யன், கீர்த்தேவ், டெனிஷ்யன், ஈஸ்வரன், ஈஷ்வரி, அத்விகேஷ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 18-09-2024 புதன்கிழமை மதியம் 1:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-09-2024 வியாழக்கிழமை மதியம் 1:30 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
