திருமதி. காந்திமதி ஜெகநாதன்
மறைவு: 28 மார்ச் 2026
யாழ். நல்லூர் அரச வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திமதி ஜெகநாதன் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை மாலை அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பொன்னுத்துரை (கூப்பன் கடை) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பரமானந்தம் (ஆயுள்வேத வைத்தியர்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன், திவ்வியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரங்கநாதன், காலஞ்சென்ற குலேந்திரன், யோகநாதன், பாலேந்திரன் (இலண்டன்), கேதீஸ்வரன் (கேதீஸ்-இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
