திருமதி குளோறியா சந்திரராணி குலசிங்கம்
தோற்றம்: 23 பெப்ரவரி 1940 - மறைவு: 16 நவம்பர் 2023
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குளோறியா சந்திரராணி குலசிங்கம் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லத்துரை, செல்லாச்சி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான J. N.பொன்னையா, சவீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற P. X. S. குலசிங்கம் (முன்னாள் உப-அதிபர், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை சந்திரராஜா அவர்களின் அருமைச் சகோதரியும்,
Dr. விவேகானந்தி யோகநாதன், குலசிங்கம் விவேகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. நாகரத்தினம் யோகநாதன், சுசீலா விவேகானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr. தேவந்தி யோகநாதன், அஷ்வீன் விவேகானந்தன், ஷாலின் விவேகானந்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை முதல் 20-11-2023 திங்கட்கிழமை வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் பொரளை கனத்தை அங்கிலிக்கன் பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
