திருமதி. ஞானகணேசன் ஆனந்தபவளம்
தோற்றம்: 05 டிசம்பர் 1942 - மறைவு: 28 ஜூன் 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா - பிரிட்டிஸ் கொலம்பியா வான்கூவார் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானகணேசன் ஆனந்தபவளம் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 43/10, தேன்தமிழ் வீதி, உவர்மலை திருகோணமலை இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குழந்தை வடிவேல் (கோபால் மாஸ்டர் திரு. இராமகிருஷ்ண மிசன், கோணேஸ்வரா இந்து கல்லூரி ஆசிரியர்) - மகேஸ்வரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா - சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
ஞானகணேசன் (வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் மரபுவழி முதன்மை கங்காணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாநந்தராசா (கணித ஆசிரியர் - திரு. கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) அன்பு சகோதரியும்,
மஞ்சுளா (கனடா), ஞானரூபன் (கனடா), சங்கீதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமார் (கனடா) இன் மாமியும்,
கிஷோத் அவர்களின் பாசமிகு பாட்டியும்,
பரமேஸ்வரி, ஞானகியம்மா, சிவகாமி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-07-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது உவர்மலை இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஞானகணேசன்:- +94 74 101 6994
+94 77 884 0140
www.tamilthakaval.org
