திருமதி. ஞானாம்பிகை இராமச்சந்திரன்
(முன்னாள் ஆசிரியை - மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை)
தோற்றம்: 08 டிசம்பர் 1935 - மறைவு: 30 ஏப்ரல் 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானாம்பிகை இராமச்சந்திரன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமச்சந்திரன் (இளைப்பாறிய ஆசிரியர் - பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலன், மாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தன், சுஜாத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யா, அச்சுதன், வைஷ்ணவி, திரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வேதா, வியாசா வித்யா ஆகியோரின் பாசமுள்ள பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 - 3:00 மணி வரை (Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில்திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
