திருமதி. ஞானாம்பிகை பேரம்பலம்
தோற்றம்: 31 மார்ச் 1939 - மறைவு: 03 டிசம்பர் 2022
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை பேரம்பலம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முத்தையா பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சரஸ்வதி, நாகரத்தினம், சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகாந்தன் (Hong Kong), சிறிகாந்தன் (பிரான்ஸ்), விஜயசிறி (கங்கா- லண்டன்), சுவர்ணசிறி (யமுனா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றோஸ் சந்திராணி (Hong Kong), நாளாயினி (பிரான்ஸ்), விஜயகுமார் (லண்டன்), தர்சன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷார்ணியா, லீறோய், நிக்ஸோன், கிறிஷோறி, விக்னன், விதுனன், Dr. கிறிஸ்ரல் (சுவேதா), ஸகிச்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது "அச்சுவேலி" இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
