Mrs Gnaneswary Subramaniam

Gnaneswary Subramaniam

Date of Birth: 25 December 1945 - Deceased: 31 August 2022

யாழ். துன்னாலை கிழக்கு வெல்லிக்கம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானஸ்கந்தவதனி, ஸ்கந்தன்(அவுஸ்திரேலியா), அருள்முகவரதன்(அவுஸ்திரேலியா), சுதந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முரளிமனோகரன், பிருந்தா, அம்பிகா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

மயூரன், அனோஜினி, சஜனி, அன்பழகன், அஸ்வினி, மிதிலன், மதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-09-2022 வெள்ளிக்கிழமை முதல் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை வரை மு.ப 09:00 மணிக்கு கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும். 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  மருமகன் - பா. முரளிமனோகரன்(தெஹிவளை)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2022 06:21)