Mrs. Gnapoorani (Chinna Mani) Iyyathurai
Date of Birth: 02 March 1946 - Deceased: 14 March 2025
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், Roermond - ஹொலண்ட், Jetetten - ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானபூரணி ஐயாத்துரை அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று தனது 79 வயதில் ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் பண்புமிகு மகளும்,
காலஞ்சென்ற தம்பையா மாணிக்கவாசகர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜயசுதா, ஜயலதா, ஜயகவிதா, ஜயராகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னராஜா, ஜெயரட்ணசிங்கம், உதயராஜ், தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
வின்சி, ஜவின், ஜெரேமியா, நெகேமியா, பெனாயா, யோவேல், தைரா, சனா, சர்யுன் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும்,
காலஞ்சென்ற பத்மாவதி, மேனகா, தவராணி, தவராஜா, பாஸ்கரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், குமாரசிங்கம் மற்றும் திருநாவுக்கரசு, லோகேஸ்வரி, பவானி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற திருப்பதி, அருந்ததி, சேக்கிழார், பகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 - 6.00 மணி வரை Friedhof Jestetten (Beim Bildstock 12, 79798 Jetetten, Germany) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-03-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
