திருமதி. கோமதி தங்கவேலு

கோமதி தங்கவேலு

தோற்றம்: 07 மே 1942 - மறைவு: 15 டிசம்பர் 2024

இந்தியா-தமிழ்நாடு பாளயங்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மட்டக்குளிய கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமதி தங்கவேலு அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தங்கவேலு அவர்களின் மனைவியும்,

சிவகுமரன் (அவுஸ்திரேலியா), கலாதேவி (இலண்டன்) ஆகியோரின் தாயாரும்,

சசிகலா (அவுஸ்திரேலியா), ரவிசங்கர் ஆகியோரின் மாமியாரும்,

தாரணிபரன் (தாரண்), கார்த்திகேயன் (கார்த்தி), ஆர்யவரன் (ஆர்யா), ஹிரன், நக்‌ஷிதா (மேக்னா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-12-2024 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இல-1/4B-11A, பார்ம் வீதி, மட்டக்குளி, கொழும்பு -15 இல் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2024 05:00)