திரு. கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம்
(ஓய்வு பெற்ற தபால் அதிபர்-யாழ்ப்பாணம்)
தோற்றம்: 10 செப்டம்பர் 1938 - மறைவு: 10 ஜூலை 2024
யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 10-07-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடனசபாபதிப்பிள்ளை-பாக்கியவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நவலட்சுமி (லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி (லண்டன்), சாந்தகுமார் (லண்டன்), வசந்தினி (லண்டன்),வினோதினி (கனடா)ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
தனபாலன், கவிதா, யசோதரன், பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாதவன், சந்தியா, வருணி, ஆரணி, அபிரா, ஆதவன், விக்னேஷ், விஷால் ஆகியோரின் பாசமிகு பாட்டனரும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம் (பட வரைவாளா்), சிவனேஸ்வரி (வவுனியா), திருமலர்தேவி (பிரான்ஸ்) காலஞ்சென்ற சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
