திருமதி. கௌரிநாயகி நாகராசா

கௌரிநாயகி நாகராசா

தோற்றம்: 29 நவம்பர் 1935 - மறைவு: 07 டிசம்பர் 2024

யாழ். காளி அம்மன் கோவிலடி, கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், இல.04, காரைக்காட்டு லேன், வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கௌரிநாயகி நாகராசா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - கனகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - சுந்தரியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

திலகவதி, மன்மதராசா, பழனிவேல் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வீ. தர்மலிங்கம், பத்மாதேவி, காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்பு மாமியும்,

சுலக்சன், கோபிகா, திவாகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கெங்காதரன், மகாலிங்கம் மற்றும் கமலாம்பிகை (ராசாத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, சந்திரசேகரம் மற்றும் விஜயலட்சுமி (சோதி) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-12-2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இல.04, காரைக்காட்டு லேன், வண்ணார்பண்ணை என்னும் முகவரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 தகவல்குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2024 05:00)