திருமதி. கிறேஸ் இன்பமணி செல்வராஜா
(இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியை ஹாட்லிக் கல்லூரி பருத்தித்துறை)
தோற்றம்: 03 அக்டோபர் 1935 - மறைவு: 10 அக்டோபர் 2022
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும்கொண்ட கிறேஸ் இன்பமணி செல்வராஜா அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி G.M. ஆழ்வாப்பிள்ளை (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. S.K இராசையா (உப அதிபர், யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V.R. செல்வராஜா (இளைப்பாறிய வடபிராந்திய முகாமையாளர் உப்புக் கூட்டுத்தாபனம் ஆனையிறவு) அவர்களின் அன்பு மனைவியும்,
தபித்தா (லண்டன்), சுதாகரன் (அவுஸ்திரேலியா), சுதர்மினி (கனடா), பாமினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிதரன், சுலோஜனா, றோகான், ஜெபதர்ஷனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை இராஜசிங்கம் (வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி), இராஜமலர் இராஜரட்ணம் (ஆசிரியை), காலஞ்சென்றவர்களான செல்வன் இராசேந்திரன், இன்பராணி ரட்ணம் (ஆசிரியை) மற்றும் ஆழ்வாப்பிள்ளை அருளானந்தம் (மெல்போர்ன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராணி அருளானந்தம் (மெல்போர்ன்), காலஞ்சென்றவர்களான மகிழா ராஜசிங்கம், பாபு ராஜரட்னம், எட்வேட் ரட்ணம், செல்வராணி இராசையா, அமிர்தராணி இரத்தினசிங்கம், கனகராஜா இராசையா, தேவராணி இராசையா ஆகியோரின் மைத்துனியும்,
லொரேட்டா Taylor, விக்டர், ஜெனல், எலியானா, இசபெலா, ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கேனன் பாரி Taylor அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
