திரு. H. சிவகுருநாதன்
தோற்றம்: 23 நவம்பர் 1945 - மறைவு: 08 ஜனவரி 2024
இந்தியா, தமிழ்நாடு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்தவரும், வத்தளையில் வசிப்பவருமான திரு. H. சிவகுருநாதன் அவர்கள் 08-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஹரிஹரபுத்திரன் - ஆச்சியம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,
தேவகி (தெய்வானை) அவர்களின் அன்பு கணவரும்,
யஷிகாந்த் (லண்டன்), சங்கீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுரேஸ்குமார், குகாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யக்ஷிதா, ஆதிரா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான ஜோதிராமலிங்கம், சண்முகலிங்ம் மற்றும் தேவகுமார், புஸ்பாவதி, பவானி ஆகியோரின் சகோதரரும்,
இராமையா, இராஜா, நித்தியானந்தா, தர்மேந்திரா, காலஞ்சென்ற ஜெயரமணி, சரோஜினிதேவி, மனோரஞ்சனி ஆகியோரின் மைத்துனரும்,
சந்திரமோகன் அவர்களின் சகலையும்,
காலஞ்சென்ற தேவராஜா, அருந்ததி, காலஞ்சென்றவர்களான சுப்புராஜ், சம்பத்குமாரி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-01-2024 செவ்வாய்க்கிழமை காலை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11-01-2024 வியாழக்கிழமை மாலை 03.00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
