திரு. இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
தோற்றம்: 11 செப்டம்பர் 1963 - மறைவு: 21 டிசம்பர் 2023
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், புதுக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு) அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையபெருமாள் (பச்சமாள்)-காசிவிசாலாட்சி அவர்களின் அன்பு மகனும்,
முருகதாசன், ஜெயலெட்சுமி, யோகதாசன், ஜெயதாசன், விஜயலெட்சுமி, காலஞ்சென்ற மோகனதாசன் மற்றும் பத்மலெட்சுமி, யோகலெட்சுமி, குகலெட்சுமி, சிவதாசன், உதயதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவாமணி, காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் லலிதாகுமாரி, ஜெயகிருஸ்ணன், நகுலேஸ்வரன், ஜெகதீசன், பிறேம்குமார், சுகிர்தா, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விஜயமோகன் மற்றும் விஜி, விவேகினி, மோகன், கோபி, யாழினி, நிமல், தனுஜா, கிருபா, ஆஷா, ரகு ஆகியோரின் மாமாவும்,
அனுசியா, சிவராம், வித்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிலா, ஆதவன், அர்ஜீன், ஜனகன், ஜனனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
லக்ஸ்மியின் அன்புப் பேரனும் ஆவார்,
மேலும் தத்துப் பிள்ளையான பிரியந்தி பிரவீனின் ஜயாவும், ஆத்மிகா ஆதிரா ஆகியோரின் தத்துப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
www.tamilthakaval.org
