Mrs. Indranantham Rajapoopathy
Date of Birth: 28 May 1957 - Deceased: 12 October 2022
யாழ். கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரானந்தம் இராஜபூபதி அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குலதிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இந்திரானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன் (குகன்- பிரான்ஸ்), ஜெசிந்தா, சஞ்சயன் (பிரான்ஸ்), அயந்தா, லக்சியா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரோஜினிதேவி, கனகநாயகம் (கனடா), காலஞ்சென்ற மல்லிகராசா, சந்திரசேகரம் (ஜேர்மனி), ஞானசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேணுகா (பிரான்ஸ்), உதயரூபன், தமிழினி (டுசி- பிரான்ஸ்), தயாபரன், பார்த்தீபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனந்தினா, அன்பினா, ஆதித், லெபிசனன், அஜய், அபின்ஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
அஸ்வின், அபிஷன், அபிஷாலினி, அனன்யா, அஸ்விகா, சந்தோஷ், பிரவின், டிஷாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, பவானந்தம், யோகானந்தம், விமலாதேவி, கலாதேவி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை ஏழாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
