Mrs. Indrani Sivagurunathan
Deceased: 04 January 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி சிவகுருநாதன் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா அழகரட்ணம் - கண்மணி தம்பதியினரின் அருந்தவ புதல்வியும்,
காலஞ்சென்ற Dr. இராசயை சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஶ்ரீரங்கதாஸ், ஶ்ரீகதிர்காமதாஸ் மற்றும் துவாராக (சிட்னி), லலிதாங்கி, ஶ்ரீகஜேந்திரதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகந்தி (சிட்னி), வசந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
கிரிசாந்தன், பிரசாந்தி, அவந்தி, சிவரஞ்சனி, கணேஷ் ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-01-2024 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் North Ryde இல் இருக்கும் Macquarie Park Crematorium, Palm Chapel இல் பார்வைக்கு வைக்கப்பட்டு. சைவக்கிரிகைகளுடன் மதியம் 1.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
