Mrs. Iruthaya Lurthuammal Paldano
Date of Birth: 12 March 1943 - Deceased: 20 April 2026
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இருதய லூர்துஅம்மாள் பல்டானோ அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. ரத்னசாமி பெஞ்சமின் பல்டானோ அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி மேரி பெர்னாண்டோ, திரு. ஜே. ஏ. பேசில் பல்டானோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வால்டர் பெர்னாண்டோ, ஷெர்லி பல்டானோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரெனால்ட்சன், கிளென்சன், ஃபெடோரா, ஷாவோன், சச்சினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரது சரீரம் 21-04-2026 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் A.F. ரேமண்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-04-2026 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் புதுச்செட்டி வீதியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலயத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
