Mr. Iyampillai Nadarajah
Date of Birth: 02 August 1927 - Deceased: 06 November 2025
யாழ் புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 06-11-2025ம் திகதி வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - பரிமளம் தம்பதியினரின் மூத்த அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தரை, கனகம்மா, இராசாத்தியம்மா மற்றும் இரத்தினம், தர்மலிங்கம் (ஐயாண்ணை), இராசதுரை, குணசிங்கம், இராணியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதன், தயாநாதன், செந்நில்நாதன், சுகுணா,ரவீந்திரன் மற்றும் சரோஜாதேவி, கமலநாதன், ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சாந்தி, பற்குணசிங்கம், மோகனா, பத்மலீலா, மதிச்சந்திரன், காலஞ்சென்ற குகப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தயான், நிஜன், கிரிதரன், சோபிகா, தர்சன், ஷர்மினி, துஷ்யந்தன், மயூரதி, செந்தூரன், மதுரன், தனுசன், லாவண்யா, மதுஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புத்தூர் அந்திராணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
