திரு. ஐயாத்துரை பத்மநாதன்
(A.பத்தர், பிரபல A/L COMBINED MATHS ஆசிரியர் கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம்)
தோற்றம்: 28 டிசம்பர் 1951 - மறைவு: 07 நவம்பர் 2025
யாழ். நெட்டலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை - சுந்தராம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராசகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயானி (கனடா), ஆரணி (Intern, Medical Officer, Teaching Hospital, Jaffna) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஷ்டிக்குமரன் (கனடா), துஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஷந்தன், சாகித்தியன், அத்விக் ஆகியோரின் அன்பு பேரனும்,
சரோஜினிதேவி (நெட்டிலைப்பாய், கோண்டாவில்), காலஞ்சென்றவர்களான இந்திராணி சுபத்திராதேவி மற்றும் தர்மவதி (கொழும்பு), பத்மாவதி (கண்டி), ஸ்ரீமனோகரி (இலண்டன்), இராகுலன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
இல- 52 கலட்டி ஒழுங்கை,
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
