திருமதி. ஜெயலட்சுமி சண்முகராஜா

ஜெயலட்சுமி சண்முகராஜா

தோற்றம்: 20 செப்டம்பர் 1955 - மறைவு: 19 பெப்ரவரி 2025

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி சண்முகராஜா அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் நடராசா - மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - நாகலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாதனா, றோகன் (இலண்டன்)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அபிராம் (பம்பலபிட்டி இந்து கல்லூரி) அவர்களின் பாசமிகு பேத்தியும்,

சக்திதாசன், காளிதாசன், சண்முகதாசன், யோகதாசன், தனலட்சுமி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 20-02-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கபட்டு, 21-02-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2025 23:19)