திருமதி. சறோஜினிதேவி ஜெயகுணபாலன்
(முன்னாள் பாலர் பாடசாலை ஆசிரியர் வேலணை பிரதேச சபை)
தோற்றம்: 01 அக்டோபர் 1952 - மறைவு: 11 ஜூன் 2022
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயகுணபாலன் சறோஜினிதேவி அவர்கள் 11-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோதிலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயகுணபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகராஜா, திலகவதி, கோவிந்தராணி, கமலாதேவி, காலஞ்சென்ற ரஞ்சித்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலட்சுமி, கேதாரலிங்கம், தேவநாயகம், சற்குணலிங்கம், இராசாத்தி, மணி, வசந்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவாஜினி, சிவறூபன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலேந்திரன், மணிமேகலா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜாணன், வைஷ்னி, அனிஸ்னன், அஸ்மிதா, யவீஷன். சகீஷன், தருணயா, விவிஸ்ணா, சஜீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
www.tamilthakaval.org
