திரு. ஜெயசிங்கம் சபாநாதன் (கமலன்)

ஜெயசிங்கம் சபாநாதன் (கமலன்)

தோற்றம்: 07 டிசம்பர் 1959 - மறைவு: 08 ஜனவரி 2024

யாழ். காரைநகர் வலந்தலைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஜெயசிங்கம் சபாநாதன் (கமலன்) அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயசிங்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து - பத்மினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ருஷ்யந்தன், உதயராகவன், விஜயவாகினி, கமலரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீர்த்தனா, யனுஷா, கோகிலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலவாணர், திரௌபதிதேவி, நளாயினி, சிவகாமசுந்தரி மற்றும் சற்குணதேவி, யசோதாதேவி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, சுப்ரமணியம், மகாலட்சுமி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

ஆதிரா, விசாகன், ஹம்சத்வனி ஆகியோரின் பேரனும்,

மயூரன், ராகவி, பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் மரதடி காரைநகர் வீட்டில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2024 05:00)