Mr. John Baskaran
(சமாதான நீதவான் (அகில இலங்கை))
கண்டியைச் சேர்ந்த திரு. ஜோன் பாஸ்கரன் அவர்கள் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஜோசப் ஜோன் - கனகரத்தினம் தேவிகாராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரதீஷ், ரதிகா, ரனிஷ் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சமந்தா, சரிந்து ஆகியோரின் மாமனாரும்,
ராதிகாவின் ஆசைத் தாத்தாவும்,
ஜெயராஜ், விக்டர், ரூபி ஆகியோரின் சகோரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 12:00 மணி வரை நுவர மலர்ச்சாலையிலும், நண்பகல் 12:30 - 2:00 மணி வரை கண்டி மாநகரசபையிலும், பிற்பகல் 2:30 - 3:45 மணி வரை கண்டி கிறிஸ்தவ தேவாலயத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் இறுதிச்சடங்குகள் கண்டி மஹியாவ பொது மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
