திரு. ஜோசப் இம்மானுவேல் பற்றிமா ராசா

ஜோசப் இம்மானுவேல் பற்றிமா ராசா

தோற்றம்: 19 பெப்ரவரி 1949 - மறைவு: 21 அக்டோபர் 2024

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கம்பஹா-களனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜோசப் இம்மானுவேல் பற்றிமா ராசா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப்-ஜோசப்பின் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, மரியநாயகம், அருளானந்தம் மற்றும் அல்பிரட் நல்லையா ஆகியோரின் அன்பு சகோதரரும்,

மேரியோசப்பின் அஞ்சலினா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் எமில் (அவுஸ்திரேலியா), ஆன் நிசாந்தி (ஓமான்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சமங்கா, சஷங்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரதின், ஒனெலி, மணித்ரா, அஹித்திரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் 23-10-2024 புதன்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-10-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.45 மணியளவில் சமய நிகழ்வுகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2024 04:00)