Rev. Joyal Devakumar Ratnam
(தலைமைப் போதகர் ரெயின்போ தேவாலயம்)

Deceased: 25 January 2025
“நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தை காத்துக் கொண்டேன்”
யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட Rev. ஜோயல் டேவகுமார் இரட்ணம் அவர்கள் நேற்று 25-01-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் செல்வரெட்ணம் - ஜொசபின் புஸ்பராணி ரெட்ணம் தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான போல் ஜெயராஜசிங்கம் சோமசுந்தரம் - புளோரா நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஈவ்லின் சாந்தினி இரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
போல் டேவஷாந் ரெட்ணம், அபிகேயில் இவான்ஜலின் குமணன் (HNB ஊழியர்), தபித்தா கிறிஸ்டின் தேவகுமார் (ஆசிரியை - யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஷெறின் நிலாந்தி ரெட்ணம் (ஆசிரியை - மன்/ ஆண்டாங்குளம் R.C.T.M.V), விவேகானந்தன் குமணன் (உப அதிபர் - சென்ஜோன்ஸ் கல்லூரி), நீதிராஜா தேவகுமார் (வைத்தியர் - LRH கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிவிஸ்ரெஷாந், அனாயா ஃபேய்த்தி, டிசான் கப்ரியேல், ஜேன் ஹடாஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செல்வகுமார், செல்வரெட்ணம் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிப்பிலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
கலாபவனம்,
டச்சு றோட், சண்டிலிப்பாய்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
