Rev. Joyal Devakumar Ratnam

(தலைமைப் போதகர் ரெயின்போ தேவாலயம்)

Joyal Devakumar Ratnam

Deceased: 25 January 2025

“நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தை காத்துக் கொண்டேன்”

யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட Rev. ஜோயல் டேவகுமார் இரட்ணம் அவர்கள் நேற்று 25-01-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் செல்வரெட்ணம் - ஜொசபின் புஸ்பராணி ரெட்ணம் தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான போல் ஜெயராஜசிங்கம் சோமசுந்தரம் - புளோரா நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஈவ்லின் சாந்தினி இரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

போல் டேவஷாந் ரெட்ணம், அபிகேயில் இவான்ஜலின் குமணன் (HNB  ஊழியர்), தபித்தா கிறிஸ்டின் தேவகுமார் (ஆசிரியை - யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷெறின் நிலாந்தி ரெட்ணம் (ஆசிரியை - மன்/ ஆண்டாங்குளம் R.C.T.M.V), விவேகானந்தன் குமணன் (உப அதிபர் - சென்ஜோன்ஸ் கல்லூரி), நீதிராஜா தேவகுமார் (வைத்தியர் - LRH கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லிவிஸ்ரெஷாந், அனாயா ஃபேய்த்தி, டிசான் கப்ரியேல், ஜேன் ஹடாஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

செல்வகுமார், செல்வரெட்ணம் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிப்பிலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-
கலாபவனம்,
டச்சு றோட், சண்டிலிப்பாய்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 00:00)