திரு. K.C. விக்னராஜா
மறைவு: 13 ஜூலை 2024
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-07 ஐ வசிப்பிடமாகவும் கொண் திரு. K.C.விக்னராஜா அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு செல்வத்துரை-பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்-நகுலம்பாள் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
குலா அவர்களின் பாசமிகு தந்தையும்,
திருமதி. லிங்கேஸ்வரி, தம்பி ஜீவரட்ணம், காலஞ்சென்ற உஷாதேவி, கந்தசாமி சம்பந்தமூர்த்தி, திருமதி. பவளேவரி, செல்வரட்ணம் சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் (இல-30/1A, மலலசேகர மாவத்தை, கொழும்பு-07) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் பொரளை புதிய மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
