திரு. கைலாசபிள்ளை மகேசலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி)
தோற்றம்: 12 டிசம்பர் 1943 - மறைவு: 03 டிசம்பர் 2021
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வடக்கு புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை மகேசலிங்கம் அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி ராஜதுரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதேவி மகேசலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுவரன், சிவேந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நடேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரதீப்குமார், விக்னேஷ், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2021 திங்கட்கிழமை அன்று புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சிறுப்பிட்டி தெற்கு காளையான்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
