திருமதி. காளிதாஸ் யோகம்மா (ரம்பா)
தோற்றம்: 02 ஆகஸ்ட் 1939 - மறைவு: 24 ஜனவரி 2025
யாழ். நல்லூர் இல 7. மூத்தவிநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காளிதாஸ் யோகம்மா அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-கண்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேல்-அவ்வை அம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காளிதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இந்திராணி கந்தசாமியின் சகோதரியும்,
உதயகுமாரி (ஓய்வு நிலை குடும்பநல உத்தியோகத்தர்-சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை), குகதாஸ் (பிரான்ஸ்). சந்திரகுமாரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகாந்தன், சுமதி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாயீஜன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆளுநர் செயலகம்-வடமாகாணம்), காலஞ்சென்றவர்களான ஜனனி, வாமனா மற்றும் நிதுசன், மிதுனா, யஸ்மினா, பூர்ணிமா (ஆசிரியர்- கிளி/ முருகானந்தாக் கல்லூரி) ஆகியோரின் பேர்த்தியும்,
அவிக்னா, சுவஸ்ரிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
