திருமதி. கமலாதேவி கங்காதரன்
மறைவு: 23 ஜூன் 2025
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல - 15,3/6, இனிசியம் றோட், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி கங்காதரன் அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கங்காதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன் (My - Lan Marketing), கல்பனா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ரவீந்திரன் (RK Industries), கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியபாமா, காலஞ்சென்ற கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. சற்குணநாதன், தாமரா ஆகியோரின் மைத்துனியும்,
Dr. டௌசினி, சஜீநாத், சகானா, துவாரகா ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
