திருமதி. கமலாதேவி குமாரக்குலசிங்கம் (ரஞ்சனி)
தோற்றம்: 30 செப்டம்பர் 1952 - மறைவு: 07 செப்டம்பர் 2024
மாத்தளை-இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி குமாரக்குலசிங்கம் அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. செல்லையாப்பிள்ளை முருகையா செல்வராஜாவின் அன்பு மனைவியும்,
செந்தில், சியோமி (நியோஷி), வினோத், விக்னேஷ் ஆகியோரின் அன்புத்தாயும்,
சந்திரமோகன், ஜமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செஸ்வின், பிரவன், தியன், ஸ்வஸ்திகா ஜாசென், அஹஸ்தியா லாசென் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-09-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
